ஆந்திர மாநிலத்தின் தொழிற்சாலை களில் ரசாயனங்களைத் தவ றாகக் கையாண்டு விபத்து நிகழ்ந்து வருவது வாடிக்கையாக உள் ளது.
இந்நிலையில், பாபட்லா மாவட்டத் தில் உள்ள இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஊழியர்களின் கவனச்சிதறலால் அதிகளவு குளோரின் வாயு வெளியேறியது. முன்கூட்டியே குளோரின் வாயு கசிவு கண்டுபிடிக்கப் பட்டதால் பெரியளவிலான விபத்து தவிர்க்கப்பட்டது. எனினும் சிறிதளவு குளோரின் வாயு கசிவால் தொழிற்சாலை யில் பணியாற்றிய 107 தொழிலாளர்கள் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டுள்ள னர். மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது.
குளோரின் உயிரிழப்பை ஏற்படுத்தும்
நீரில் கரையும் தன்மை கொண்ட நச்சுத்தன்மை உடையது குளோரின். குளோரின் வாயுவைச் சுவாசித்தால், சுவாசக்குழாயைச் சேதமடையச் செய்யும். நுரையீரலைத் தாக்கி உயி ரிழப்பை கூட ஏற்படுத்தும். ஆனால் நம் நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் குளோரின் வாயுவை அலட்சியமாகவே கையாண்டு வருகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.